search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் விழாவில் மோதல்"

    கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 29 பேரிடம் விசாரணை நடக்கிறது.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே யுள்ள பறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பையன் (வயது 19). கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.  அதே பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்.கல்லூரி மாணவரான சக்திவேல் ஆட்டோவும் ஒட்டி வருகிறார். இந்நிலை யில் தண்டேகுப்பம் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் இவர்கள் 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இது 2 தரப்பினர் இடையேயான மோதலாக மாறியது. இந்த மோதலில் காயம் அடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்கு சேர்க்கப்பட்டுள்ளனர். 

    காயமடைந்த சின்னப்பை யன் தந்த புகாரின் பேரில் சக்திவேல்,ராஜேஷ்குமார், பிரபு, ஜெயராஜ்,சக்திவேல், அப்பு ,ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை கிருஷ்ண கிரி டவுன் போலீசார் கைது செய்துள்ளனர்.
    இதேபோல மாணவர் சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில் சின்னப்பை யன், சுரேஷ்குமார் உள்ளிட்ட 29 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சமீப காலமாக மாண வர்கள் இடையே ஏற்படும் மோதல் சமூக ஆர்வலர்கள் இடையே வேதனையை ஏற்படுத்திவருகிறது.
    வீராம்பட்டினம் கோவில் விழாவில் வண்டியை பார்க்கிங் செய்ததில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் ஒதியம்பட்டு அன்புநகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது30). இவர் நேற்று முன்தினம் வீராம்பட்டினம் கோவில் திருவிழாவுக்கு சென்றார். அங்குள்ள சுனாமி நகரில் பிரபாகரன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார். அப்போது 2 பேர் வந்த மோட்டார் சைக்கிள் மீது பிரபாகரன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் உரசியது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரும் பிரபாகரனிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். மேலும் பீர்பாட்டிலால் குத்தினார். இதில் காயம் அடைந்த பிரபாகரன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரபாகரனை தாக்கியவர்கள் வீராம்பட்டினத்தை சேர்ந்த பிரேம் மற்றும் மதுரையை சேர்ந்த ராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×